follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலா?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலா?

Published on

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் உள்ளக கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் அரசாங்கம் கலைக்க தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்குக் காரணம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அடுத்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை.

எவ்வாறாயினும், அடுத்த வருடம் மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், எந்தவொரு அரசியல் கட்சியாலும் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் கூட்டு அரசாங்கமொன்று உருவாக்கப்படும் மற்றும் அந்த கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதியிடம் சென்று புதிய அரசாங்கத்தை அமைத்து முன்னோக்கி பணிகளை தொடரும்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் உரிய காலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா? இல்லை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை, இன்று (23) அவசர அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு என்பன திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...