follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1'இலக்கிற்கு குறுக்கே யாரு வந்தாலும் தடுப்பேன்'

‘இலக்கிற்கு குறுக்கே யாரு வந்தாலும் தடுப்பேன்’

Published on

நாட்டின் குற்றப் பக்கத்தை இல்லாதொழிக்கும் இலக்கை கொண்டிருப்பதாகவும், அந்த இலக்கை யாரேனும் தடுத்தால் அவர்களைத் தடுப்பேன் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

எவ்வளவு “பலம்” உள்ளவர்களாக இருந்தாலும் அப்படித்தான் நடந்து கொள்வேன் என்றும் அமைச்சர் கூறினார்.

ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர், அனைத்து மாகாணங்களிலும் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண வேண்டும் என்று டிரான் அலஸ் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற பொலிஸ் செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் சிலர் தற்போது ஆத்திரமடைந்து தம்மை தாக்குவதாக தெரிவித்த அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபரும் இதெல்லாம் போதைப்பொருள் பணம் என தெரிவித்திருந்தார்.

பல வருடங்களாக இந்தப் பிரச்சினைகளால் தாம் சிரமப்பட்டு வருவதாகவும், அவரை வீழ்த்த முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்குத் துணை நிற்பேன் என பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...