follow the truth

follow the truth

July, 19, 2025
HomeTOP1சுமார் 26 கோடி அபராதம் விதித்தமை தொடர்பிலான அறிவிப்பு

சுமார் 26 கோடி அபராதம் விதித்தமை தொடர்பிலான அறிவிப்பு

Published on

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவலின்படி, இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில் சுமார் 22,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 21,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்த வழக்கில், நீதிமன்றங்கள் அபராதமாக இருபத்தி ஆறு கோடியே எழுபத்தாறு இலட்சத்து முப்பதாயிரத்து நானூற்று நாற்பத்து எட்டு ரூபாயை வசூலித்துள்ளன.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக உரிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திருவிழாக் காலத்தை இலக்காகக் கொண்ட சிறப்புத் திட்டத்தின் கீழ் 1,185 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கைகள் அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் அங்கத்தவரான ‘கல் இப்பா’ கைது

களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள், மத்துகம, போபிட்டிய பகுதியில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் அங்கத்தவரான 'கல் இப்பா' என...

பாடசாலை செல்லும் மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா...

இலங்கையில் உள்ள 5,000 மருந்தகங்களில் பெரும்பாலானவற்றில் மருந்தாளுநர்கள் இல்லை

அரச வைத்தியசாலைகளிலும் மருந்தாளுநர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், இலங்கையில் உள்ள 5,000 மருந்தகங்களில் பெரும்பாலானவற்றில் மருந்தாளுநர்கள் இல்லை என எதிர்க்கட்சித்...