follow the truth

follow the truth

July, 29, 2025
HomeTOP1மின் கட்டணம் ரூ.3,000 இருந்து ரூ.800 ஆக குறைப்பு

மின் கட்டணம் ரூ.3,000 இருந்து ரூ.800 ஆக குறைப்பு

Published on

மின்சார கட்டணத்தை 3,000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மின் இணைப்பு மீளமைக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தால் குறைக்கப்படும்
  • 30 அலகுகளுக்கு குறைவான பிரிவில் பாவனையாளர்களுக்கு அலகுகளுக்கான கட்டணம் 33 வீதத்தால் குறைப்பு
  • 31 மற்றும் 60 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 28 சதவீதத்தால் குறைந்துள்ளது
  • 60 முதல் 90 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 30 சதவீதம் குறைகிறது
  • 90 மற்றும் 180 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 24 சதவீதம் குறைந்துள்ளது
  • 180 அலகுளுக்கு மேல் உள்ள வீட்டு மின் பாவனை பிரிவினருக்கு மின்கட்டணம் 18 சதவீதத்தால் குறைப்பு
  • வழிபாட்டுத் தலங்களுக்கு 33 சதவீத குறைப்பு
  • ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளின் மின் கட்டணம் 18 சதவீத குறைப்பு
  • பொது நோக்கம் பிரிவில் 23 சதவீதம் குறைவு
  • பொதுத்துறைக்கு 22 சதவீதம் மின்சார கட்டணம் குறைக்கப்படும்.
  • வீதி விளக்குகளுக்கு 20 சதவீதம் சலுகை

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமைத் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

“மன்னிக்க வேண்டுகிறேன்!” ஜனாதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

ரயில்கள் நின்றுவிடுமா? 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...