போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளின் தகவல்கள் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அபராதம் செலுத்தப்படும் தபால் நிலையத்தின் ஊடாக, குற்றத்தின் தன்மை, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் சாரதி அனுமதிப்பத்திரம், தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் தரவு அமைப்பில் இணைக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் தெரிவித்தார்.