follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1சீனா மற்றும் இலங்கை இடையே 9 புதிய ஒப்பந்தங்கள்

சீனா மற்றும் இலங்கை இடையே 9 புதிய ஒப்பந்தங்கள்

Published on

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

சீன பிரதமர் லி குவாங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இருதரப்பு கலந்துரையாடலில் பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலதிகமாக சமூக, கலாச்சார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை உருவாக்குவது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவிலும் ஒத்துழைப்பிலும் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...