follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுஅரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை – திஸ்ஸ விதாரண

அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை – திஸ்ஸ விதாரண

Published on

நடைமுறை அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதியாக இருந்த போது எம்முடன் கலந்துரையாடி சில தீர்மானங்களை எடுத்தார். ஆனால் அவ்வாறான நடைமுறையை நடப்பு அரசாங்கத்தில் காண முடியவில்லை. அதனால் அரசாங்கத்தில் உள்ள குறைப்பாடுகளை எமக்கு சுட்டிக்காட்ட முடியாமல் உள்ளது.

தற்போதைய நிலையில் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி பயணிக்கின்றது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் சிரமமப்படுகின்றனர் இவ்வாறான பல பிரச்சினைகள் உள்ளன.

இவை தொடர்பில் கதைக்க எமக்கு சந்தர்பமில்லாமல் உள்ளது. எனக்கு உறுதியளித்தபடி அமைச்சரவையில் எனக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை. நான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே. ஆகவே அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனை வழங்கவும் முடியாதுள்ளது.

மக்கள் சிரமத்திற்குள் விழுவதை தடுக்க என்னிடம் பல யோசனைகள் உள்ளன. கொவிட் சமூகத்தில் பரவலடையும் போது அதனை தடுக்க பிரத்தியேக வேலைத்திட்டம் ஒன்றை அமுலாக்க வேண்டும். அது தொடர்பான எனது ஆலோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனது ஆலோசனைகள் ஏற்கப்பட்டிருக்குமானால் நிலைமை கடினமாய் இருந்திருக்காது  என நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்...

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...