follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுவிவசாயிகளிடமிருந்து 100,000 கிலோ மஞ்சள் கொள்வனவு

விவசாயிகளிடமிருந்து 100,000 கிலோ மஞ்சள் கொள்வனவு

Published on

நாடளாவிய ரீதியில் விவசாயிகளிடமிருந்து 100,000 கிலோகிராம் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வாசனைத் திரவியங்கள் மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் தொடர்பான கைத்தொழில் ஊக்குவிப்புக்கான அரச அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சும் இலங்கை வாசனைப் பொருள் சந்தைப்படுத்தல் சபையும் மஞ்சளை கொள்வனவு செய்துள்ளது.

ஒரு கிலோகிராம் மஞ்சளுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை 165 ரூபாய். இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மஞ்சள் மூலமாக மஞ்சள்ப்பொடி மற்றும் உலர் மஞ்சள் தயாரிக்கப்பட்டு மசாலா சந்தைப்படுத்தல் சபையின் விற்பனை நிலையங்கள் மூலம் நியாயமான விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் என அரச அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...