follow the truth

follow the truth

June, 21, 2025
Homeஉள்நாடுபேக்கரி தொழில் தொடர்ந்தும் வீழ்ச்சி : வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள்!

பேக்கரி தொழில் தொடர்ந்தும் வீழ்ச்சி : வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள்!

Published on

பேக்கரி தொழில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் கோதுமை மாவின் விலையில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை, இதனால் பேக்கரி தொழிலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது வாகனங்களில் பேக்கரி உணவு பொருட்களை கொண்டு சென்று விற்பனையில் ஈடுபடுவோர் வெகுவாக குறைந்துள்ளனர்.

பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களின் கோதுமை மா பேக்கரிகளின் தேவையில் 25 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறன.

தற்போது சிறிய அளவிலான பேக்கரிகள் பெருமளவு மூடப்பட்டுள்ளதாகவும், இத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக விண்ணப்பித்து வருவதாகவும், சிலர் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.

துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து தனியார் வர்த்தகர்கள் கோதுமை மாவை இறக்குமதி செய்தால் கோதுமை மாவின் விலையில் எவ்வித குறைப்பும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என...

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...