follow the truth

follow the truth

May, 6, 2025
HomeTOP1"ஒரு வருடம் நாட்டை சுவாசிக்க விடுங்கள்"

“ஒரு வருடம் நாட்டை சுவாசிக்க விடுங்கள்”

Published on

நாட்டை அராஜகம் இன்றி ஒரு வருடத்திற்கு சுதந்திரமாக சுவாசிக்க விடுமாறு அனைத்து அரசியல் தரப்பினருக்கும் கோரிக்கை விடுப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

“உங்கள் போராட்டத்தை செய்யுங்கள். ஆனால் வளர்ச்சிக்கான பாதையை அடைத்தால், நாடு அராஜகமாவதைத் தடுக்க முடியாது” என்றார்.

கொவிட் தொற்று பரவி மூன்று வருடங்களின் பின்னர் இலங்கை வந்துள்ள சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற முதலாவது இலங்கை விமானத்தை வரவேற்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அந்த விமானம் மூலம் நூற்றி இருபது சீன சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வந்தனர்.

அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது பெரும் முன்னேற்றமாகும். எதிர்காலத்தில் 500,000 சீன சுற்றுலாப் பயணிகள் வந்தால், பெறப்பட்ட தொகை சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொகைக்கு சமம் என தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க...