follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉலகம்ஹைதியில் சிறுவர்கள் உட்பட 17 பேர் கடத்தல்

ஹைதியில் சிறுவர்கள் உட்பட 17 பேர் கடத்தல்

Published on

ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் கூலிப்படையினரால் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, கடத்தல் கும்பல்களின் கைவரிசை மீண்டும் ஓங்கியுள்ளது.

கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிகளவு கடத்தல் சம்பவங்கள் நடக்கும் நாடாக இருந்து வருகிறது. எனினும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் பலனாக கடந்த சில ஆண்டுகளாக அங்கு கடத்தல் சம்பவங்கள் குறைந்திருந்தன.

இந்நிலையில், ஹைதியின் தலைநகர் போர்ட் அவ்பிரின்சில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றிவரும் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவாலய ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு அருகில் உள்ள ஒரு ஆசிரமத்துக்கு சென்றுவிட்டு, பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தவேளை, இனந்தெரியாத கும்பலொன்று அதிலிருந்த சிறுவர்கள் உட்பட 17 பேரை கடத்திச் சென்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஹைதி அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்து வருகிறோம் என போர்ட் அவ் பிரின்சில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாய்லாந்தின் பிரதமர் பதவி இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமராக இருந்த பெட்டோங்தார்ன் சினவத்ரா தனது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவலளிக்கின்றன. இந்த முடிவுக்கு...

காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து விமான மற்றும் நிலைத்தடிப் போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும்...

தெலுங்கானாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு

ஹைதராபாத் - தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலையில் ஊழியர்கள்...