follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉலகம்ஹொண்டுராஸ் பெண்கள் சிறையில் நடந்த மோதலில் 41 பேர் பலி

ஹொண்டுராஸ் பெண்கள் சிறையில் நடந்த மோதலில் 41 பேர் பலி

Published on

ஹொண்டுராஸ் மாகாணத்தில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் நேற்று (20) இடம்பெற்ற மோதலில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு போட்டி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், ஒரு கும்பல் சிறை அறைக்கு தீ வைத்ததால் இது நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் பெரும்பாலான இறப்புகள் தீயினால் ஏற்பட்டவை, ஆனால் சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இறந்தவர்கள் அனைவரும் கைதிகளா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹொண்டுராஸ் துணை பாதுகாப்பு அமைச்சரும் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாய்லாந்தில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை தாண்டிய பிரச்சினை கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் நிலையில், இருநாடுகளிலும்...

தாய்லாந்தின் 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்

தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லை மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கம்போடியாவின்...

பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்தும் தீர்மானம்?

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில்,...