follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1கிரிக்கெட் வீரர்கள் உபாதையாவது குறித்து சர்ச்சைக்குரிய தகவல்

கிரிக்கெட் வீரர்கள் உபாதையாவது குறித்து சர்ச்சைக்குரிய தகவல்

Published on

கிரிக்கெட் அணியின் வைத்தியர் ஒருவர் வழங்கிய மருந்தினால் இலங்கை அணியின் வீரர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று(14) கோப் குழுவில் வெளிப்படுத்தினார்.

கோப் குழு முன்னிலையில் இலங்கை கிரிக்கெட் சபை அழைக்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய தயாசிறி ஜயசேகர, வைத்தியரால் போடப்பட்ட ஊசிகளினால் வீரர்களின் பாதங்களில் பல்வேறு கோளாறுகள் தோன்றியுள்ளதாக குறிப்பிட்டார்.

அந்த மருத்துவர் தொழில்முறை விளையாட்டு மருத்துவர் அல்ல என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.

‘வன் ஷாட்’ என்ற புனைப்பெயர் கொண்ட வைத்தியர் வலிநிவாரணி மருந்துகளை வழங்கி வீரர்களுக்கு நீண்டகால நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 150,000 ரூபா சம்பளத்திற்கு சேவை வழங்குமாறு கோரி அப்போதைய பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு கடிதம் அனுப்பப்பட்டமை தொடர்பில் தேசிய மக்கள் படையின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கிரிக்கெட் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கோரிக்கையை பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நிராகரித்ததாக கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் உரையாற்றிய அநுர குமார திஸாநாயக்க, கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கடிதம் அனுப்பி இவ்வாறான கோரிக்கையை முன்வைப்பது மிகவும் பிழையான செயலாகும்.

அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கும் பணத்தில் வீரர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கிரிக்கெட் அமைப்பு, அனைத்து வீரர்களுக்கும் 25 சதவீத ஊதியம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

பாடசாலை விளையாட்டுக்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் வீரர்கள் உட்பட 60 வீதமான தொகையானது விளையாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் எனவும் கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...