follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1இன்று முதல் விசேட பேரூந்து சேவை

இன்று முதல் விசேட பேரூந்து சேவை

Published on

சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்திற்கான விசேட பேரூந்து சேவை இன்று (05) முதல் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் கிராமங்களுக்குச் செல்வதற்காக இந்தப் பேரூந்துச் சேவை நடத்தப்படும் என்றும், அதற்காக சுமார் 200 மேலதிக பேருந்துகள் பயன்படுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பேரூந்து சேவை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் விசேட ரயில் சேவையும் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த சேவையின் கீழ் நாளாந்தம் சுமார் 12 விசேட ரயில் பயணங்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த சிறப்பு ரயில் சேவை வரும் 15ம் திகதி வரை இயக்கப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ் கவிழ்ந்து விபத்து – 15 பேருக்கு காயம்

குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து...

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்...

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...