follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் ஜனாதிபதி

Published on

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளனர்.

இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“நான்காவது தவணையை பெறுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

எந்தத் தாமதமும் இன்றி, தேர்தல் காலத்திலும் அந்த வேலைத்திட்டத்தில் எவ்வித விலகலும் இன்றி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைத் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் மூன்றாவது பரிசீலனையில் கிடைக்கவுள்ள 4வது தவணை எந்த வகையிலும் தாமதமானால் அது இலங்கையின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அந்த விளைவை தவிர்க்க ஜனாதிபதி விசேட வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளார்.

வரவிருக்கும் காலத்தில், கடன் உரிமையாளர்களின் இந்த திட்டத்தை எவ்வாறு பாதுகாப்பது குறித்து கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...