follow the truth

follow the truth

May, 5, 2025
Homeவிளையாட்டுதலைமைத்துவத்தால் ஏமாற்றமடைந்த பாபர் அசாமின் தீர்மானம்

தலைமைத்துவத்தால் ஏமாற்றமடைந்த பாபர் அசாமின் தீர்மானம்

Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் ஒருநாள் போட்டி தலைமை பதவியில் இருந்து விலகியுள்ளார்.

X தளத்தில் அவர் பதிவிட்டுள்ள குறிப்பில், நேற்றிரவு தான் ODI தலைமை பதவியில் இருந்து இராஜினாமா செய்ததாக கூறினார்.

முன்னதாக 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் மோசமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

அவருக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி அணியின் தலைவராக இருந்தார். ஆனால் மார்ச் 2024 இல் பாபர் மீண்டும் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், 2024 டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் நாக் அவுட் ஆனதால், பாகிஸ்தான் அணித் தலைவராக அவர் இரண்டாவது முறை தோல்வியடைந்தார்.

அங்கு, மிகவும் குறைந்த தரவரிசையில் இருந்த அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

பின்னர், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியடைந்தது.

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடும் அழுத்தத்தில் உள்ளது, அதற்கு முக்கிய காரணம் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததுதான் என்றும் கூறப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...