follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுதிகதி மாற்றியமைத்து விற்பனை செய்யவிருந்த அரிசி மூடைகள் மீட்பு

திகதி மாற்றியமைத்து விற்பனை செய்யவிருந்த அரிசி மூடைகள் மீட்பு

Published on

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் நேற்று (25) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அந்த அரிசி மூடைகளில் 2022ஆம் ஆண்டு காலாவதி திகதி இருந்ததாகவும், ஆனால் களஞ்சியசாலை உரிமையாளர் திகதியை 2024 என மாற்றி புதிய லேபிள்களை பயன்படுத்தி அரிசியை மீண்டும் பொதிசெய்து களஞ்சியசாலையில் சேமித்து வைத்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அரிசிப் பொதிகளில் அச்சிடப்பட்ட விலை மற்றும் நிறைகள் என்பன மாற்றப்பட்டு கொழும்பு 14 பகுதியிலுள்ள களஞ்சியசாலையில் வைக்கப்பட்டு எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பின் போது, ​​உற்பத்தித் திகதி மாற்றப்பட்ட 25 கிலோகிராம் அரிசி பொதிகள் 717 நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UPDATE – கந்தானை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கந்தானை பொதுச்...

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு

கந்தானை பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்...

மறு அறிவித்தல் வரை வட மாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை...