follow the truth

follow the truth

June, 17, 2025
Homeலைஃப்ஸ்டைல்முகத்தை உடனடியாக பளபளப்பாக்க இந்த 2 பொருட்களும் போதும்

முகத்தை உடனடியாக பளபளப்பாக்க இந்த 2 பொருட்களும் போதும்

Published on

பெண்கள் எப்போதும் தங்கள் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது மிகவும் இயற்கையானது. இதற்கு பல்வேறு வகையான சோப்புகள் மற்றும் ஃபேஸ் வாஷ் கிரீம்களை சோப்புகள் முகத்தை கழுவும் பழக்கம் உள்ளது.

இயற்கை அழகுக்கு செயற்கையான சோப்பும் கிரீம்களும் எதற்கு? நமது அழகு கெடாமல் இருக்கவும் அந்த அழகை அதிகரிக்கவும் ஒரு சில இயற்கை பொருட்கள் போதும். செயற்கை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம்.

தினமும் சோப்பு போட்டு முகத்தை கழுவுவதற்கு பதிலாக இந்த இரண்டு பொருட்களை கொண்டு முகத்தை கழுவுங்கள். வித்தியாசத்தை நன்றாக பார்க்கலாம். இது எளிதான முறையும் கூட. அது என்ன முறை என்பதை குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
முல்தானி மெட்டி (முல்தானி மண்)
தக்காளி

இரண்டு ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி பழ விழுது கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இந்த தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யவும்.

பின்னர் வட்டமாக மசாஜ் செய்வது சிறந்தது. கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 2 நிமிடம் கழித்து சிறிது காய்ந்ததும் தண்ணீரில் முகத்தை கழுவலாம். சோப்புக்குப் பதிலாக காலையிலும் மாலையிலும் இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும்.

உங்கள் முகத்தில் உள்ள வெள்ளை செல்கள், கருப்பு செல்கள், முகப்பரு போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த முல்தானி மெட்டி உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். சருமத்தை மென்மையாக்குகிறது.

தக்காளி விழுது உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை அகற்ற உதவுகிறது. அதுமட்டுமின்றி, இந்த தக்காளி பழ விழுது உங்கள் சரும நிறத்தை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த முறையை தினமும் தொடர்ந்து பயன்படுத்தினால், உங்கள் முகத்தில் நிச்சயம் வித்தியாசம் தெரியும் என்பதில் சந்தேகம் இல்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி – மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டா?

கடின மற்றும் மிகக்கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு. ஆனால்...

முந்திரி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முந்திரி பழம் கோடை காலங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. முந்திரி பழம் இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இந்த...

கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை. இது போதுமான அளவில் இருந்தால் உடலில் எந்தப்...