follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP2இன்னொரு தோல்வியைத் தவிர்க்க, நாளை நாம் வெல்ல வேண்டும்

இன்னொரு தோல்வியைத் தவிர்க்க, நாளை நாம் வெல்ல வேண்டும்

Published on

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (08) நடைபெறவுள்ளது.

தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றதால் தொடரை இழக்காமல் இருக்க நாளைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் ஒரு நாள் போட்டி இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒட்டுமொத்தமாக, ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி சதவீதம் 33% மற்றும் நியூசிலாந்து அணியின் வெற்றி சதவீதம் 70% ஆகும்.

டி20 தொடரிலும் முதல் ஒரு நாள் போட்டியிலும் இலங்கை அணியின் துடுப்பாட்ட துறையின் பலவீனமே போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

முதல் போட்டியில் விளையாடிய அதே அணியையே நாளைய போட்டியிலும் இலங்கை அணி களமிறக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள்;

பெத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க, ஜனித் லியனகே, சமிந்து விக்கிரமசிங்க, வனிந்து ஹசரங்க, எஷான் மாலிங்க, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

மாணவர்களுக்கு இலவச பாதணிகளுக்கான 3,000 ரூபா வவுச்சர்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும்...

மாணவர்களுக்கான போஷாக்கு உணவு திட்டம் – 2025ல் நடைமுறைக்கு

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான...