follow the truth

follow the truth

May, 8, 2025
HomeTOP1எரிபொருள் விலை அதிகரிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்பு!

Published on

உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி அதன் விலை 157 ரூபாவில் இருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 23 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 184 ரூபாவில் இருந்து 207 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 111 ரூபாவில் இருந்து 121 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதன் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும். 144 ரூபாவாக இருந்த இதன் விலையை 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 77 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாவாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...

பொசொன் தான நிகழ்சித் தொடர் குறித்து கலந்துரையாடல்

சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே...