follow the truth

follow the truth

February, 14, 2025
HomeTOP2நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில்..

நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில்..

Published on

ஒரு கிலோகிராம் நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில் நிர்ணயிக்கப்படும் எனவும் அவசரப்பட வேண்டாம் என  விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கல்னேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதிலும், நெல் விலையிலும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டால் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்யும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்கள் தங்களிடம் இருந்து மிகக் குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல் ஆலை உரிமையாளர்கள் சிலர் ஈரமான நெல்லை 85 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நேற்று(30) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இவ்வாறு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக நெல் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்படும் என விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டு அமெரிக்க திட்டங்கள் இடைநிறுத்தம்

அமெரிக்காவில் நிதியளிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. இதை அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால்...

சட்டப் பரீட்சையில் நாமல் காப்பி அடித்தாரா? சிஐடி விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு சட்டவிரோதமாக...

ரணிலும் மைத்திரியும் கொள்ளுப்பிட்டியில் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கநேற்று (13) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில்...