follow the truth

follow the truth

March, 28, 2025
HomeTOP1இருதய சிகிச்சைக்காக இலங்கையில் 3 மாத்திரைகள் அறிமுகம்

இருதய சிகிச்சைக்காக இலங்கையில் 3 மாத்திரைகள் அறிமுகம்

Published on

மோரிசன் நிறுவனம் இருதய சிகிச்சைக்காக 3 மாத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை மருந்து உற்பத்தித் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் மோரிசன் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது.

இந்நிறுவனம் இலங்கையில் முதல் முறையாக, இருதய சிகிச்சைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று மாத்திரைகளை அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் புரிந்துள்ளது.

இந்த புதிய உள்நாட்டு மருந்து உற்பத்தி மூலம் நோயாளிகள் மாத்திரைகளுக்கு செலவிடும் தொகையைக் குறைத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் எனினும் எந்தவொரு மருந்தையும் ஏற்றுமதி செய்வதற்கு முன்பு மூன்று ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்யப்பட்ட நாட்டில் பயன்படுத்த வேண்டும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

வணிக நோக்கம் மாத்திரமின்றி நோயாளிகளின் நலனை அடிப்படையாகக் கொண்டு இந்த மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் – சுகாதாரம் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான தாய்லாந்து தூதர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Mr. Paitoon Mahapannaporn) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர்...

சீரற்ற காலநிலை – பனாமுர பகுதியில் பாதிப்பு

எம்பிலிப்பிட்டிய பனாமுர பகுதியில் இன்று (27) மாலை பெய்த கடும் மழையால் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பனாமுர...

கைதான சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில்...