follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1இருதய சிகிச்சைக்காக இலங்கையில் 3 மாத்திரைகள் அறிமுகம்

இருதய சிகிச்சைக்காக இலங்கையில் 3 மாத்திரைகள் அறிமுகம்

Published on

மோரிசன் நிறுவனம் இருதய சிகிச்சைக்காக 3 மாத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை மருந்து உற்பத்தித் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் மோரிசன் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது.

இந்நிறுவனம் இலங்கையில் முதல் முறையாக, இருதய சிகிச்சைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று மாத்திரைகளை அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் புரிந்துள்ளது.

இந்த புதிய உள்நாட்டு மருந்து உற்பத்தி மூலம் நோயாளிகள் மாத்திரைகளுக்கு செலவிடும் தொகையைக் குறைத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் எனினும் எந்தவொரு மருந்தையும் ஏற்றுமதி செய்வதற்கு முன்பு மூன்று ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்யப்பட்ட நாட்டில் பயன்படுத்த வேண்டும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

வணிக நோக்கம் மாத்திரமின்றி நோயாளிகளின் நலனை அடிப்படையாகக் கொண்டு இந்த மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...

இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று(09) முதல் பல விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம்...

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...