follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP1பிரதமரின் மகளிர் தின செய்தி

பிரதமரின் மகளிர் தின செய்தி

Published on

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இன்று நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்திற்கான செய்தியை இன்று அனுப்பிவைக்கும் போதே பிரதமர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இது நாம் அடைந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பெண்ணியத்திற்கு எதிரான சித்தாந்தங்களை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டிய நேரம் இது.”

“பாலின அடிப்படையிலான வன்முறை, பொருளாதாரக் கஷ்டங்கள் மற்றும் அரசியல் புறக்கணிப்பு ஆகியவை கிராமப்புற சமூகங்களில் உள்ள பெண்கள், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பெண்கள், தோட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர் துறையில் உள்ள பெண்கள் போன்ற பல்வேறு சமூகக் குழுக்களை விகிதாசாரத்தில் பாதிக்கின்றன.”

இந்த சர்வதேச மகளிர் தினத்தில், பிரதமரின் செய்தி, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு, கடந்த, நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததியினருக்காக செயல்படுவோம், நீண்ட கால மாற்றத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம் என்பதை காட்டுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

பலஸ்தீன் காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா...

2025ல் இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

08 மாவட்டங்களில் மூன்று நாட்கள் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெங்கு நுளம்பு...

கொம்பனித் தெரு இரவு விடுதி மோதல் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் முதலாம் திகதி...