follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP1நியாயமான சந்தையில் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள இலங்கைக்கு JICA மற்றும் JFTC ஆதரவு

நியாயமான சந்தையில் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள இலங்கைக்கு JICA மற்றும் JFTC ஆதரவு

Published on

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஜப்பான் நியாய வர்த்தக ஆணைக்குழு (JFTC) ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் இன்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தபோது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.

வர்த்தகத்தில் நியாயபூர்வமிக்க தன்மையை உருவாக்குவதன் மூலம் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் பாதுகாக்கப்படுவதோடு, இதன் மூலம் நாட்டில் போட்டிமிக்க சந்தை உருவாக்கப்படுகின்றது என்றும் பிரதிநிதிகள் குழு இங்கு சுட்டிக்காட்டியது.

இந்தப் போட்டித்தன்மை வாய்ந்த வர்த்தகக் கொள்கை, குறிப்பாக ஜப்பான் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களித்துள்ளது என்பதை பிரதிநிதிகள் குழு எடுத்துரைத்ததுடன், நுகர்வோர் உரிமைகள் மற்றும் புத்தாக்கங்களுக்கு அதன் பங்களிப்பை விளக்கியது.

இலங்கை சந்தையை உயர் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம் நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை மாற்றங்கள் குறித்து இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் கவனம் செலுத்தியுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், மேலும் அந்தத் திட்டங்கள் குறித்து பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் விதித்த தடை ஒருதலைப்பட்சமானது – வௌிவிவகார அமைச்சு

முன்னாள் இராணுவப் பிரதானிகள் மூவர் உள்ளிட்ட நால்வருக்கு தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கான எச்சரிக்கை

நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவது மற்றும் அது தொடர்பான விபத்துகளைக் குறைப்பது குறித்து பொலிஸ்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று(26) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இலவசக்கல்வி இணைமருத்துவ விஞ்ஞானப் பட்டதாரிகளை தவிர்த்து...