follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉலகம்டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

Published on

ஒமிக்ரொன் அச்சுறுத்தல் காரணமாக இந்திய தலைநகர் டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து 2ஆவது நாளாக 200இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதே போன்று கர்நாடகாவில் நாளை முதல் ஜனவரி 7ஆம் திகதி வரை இரவு நேர ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...