follow the truth

follow the truth

August, 10, 2025
Homeலைஃப்ஸ்டைல்குழந்தைகளை தாக்கும் 'தக்காளி காய்ச்சல்'

குழந்தைகளை தாக்கும் ‘தக்காளி காய்ச்சல்’

Published on

கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் ‘தக்காளி காய்ச்சல்’ பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, கோடை காலங்களில் இந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

உடலில் சிவப்பு நிறத்தில் தக்காளி போல் சிறிய கொப்புளங்கள் தோன்றுவதால் இந்த பாதிப்பை தக்காளி காய்ச்சல் என பேச்சு வழக்கில் அழைக்கின்றனர்.

இது தொடர்பாக குழந்தைகள் நல வைத்தியர் ஒருவர் கூறுகையில்;

“.. கை, கால் மற்றும் வாய் நோயால், குழந்தைகளுக்கு தோல் வெடிப்பு மற்றும் எரிச்சல், அதிக காய்ச்சல் மற்றும் சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இந்த காய்ச்சல் ஒரு வாரத்தில் தானாகவே சரி ஆகிவிடும்.

மேலும், இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கை, கால் மற்றும் வாய் நோய் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஏற்படுகிறது.

பாடசாலைகளுக்கு செல்லும் குழந்தைகள், நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போதும் அவர்கள் கை, கால், முகம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்த காய்ச்சலை தவிர்க்க முடியும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஓட்ஸ் வடை

ஓட்சில் இரும்பு சத்து, மெக்னீஷியம் உட்பட பல விதமான புரத சத்துகள் உள்ளன. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். உடல் எடையை...

இரவில் வேலை… பெண்களின் ஹார்மோன்களில் ஏற்படும் சிக்கல்கள்!

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இரவு பணி என்றால் ஆண்கள்தான் செய்வார்கள் என்ற...

எடை குறைப்புக்கு ஏற்ற உணவு முறை இதுதான்

குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) உடல் எடை குறைப்பதற்கு நன்மை பயக்கும் கருவியாக இருக்கும்...