“ஊழல் குற்றத்தைச் செய்ததாக” சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சிறை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த வழக்கு இன்று (20) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.