மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, இன்று காலை 7 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை பொதுஜன ரயில்வே ஊழியர் சங்கத்தின் செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்தார்.
தங்கள் பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.