follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1மீண்டும் திறக்கப்படும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் !

மீண்டும் திறக்கப்படும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் !

Published on

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி கச்சா எண்ணெய் தொகுதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.வோல்கா தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 03 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.

எவ்வாறாயினும், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு உறுதியளித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வு வாரம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி இன்று (ஜூலை...

இன்றும் வானம் கருமேகம் – சில இடங்களில் மழை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை அறிக்கையின் படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் கூடுதலாக, நுவரெலியா, கண்டி,...

மஹரகம – நாவின்னவில் பேருந்து விபத்து

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில்...