follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1மத்தளவுக்கு புத்துயிர் - பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்

மத்தளவுக்கு புத்துயிர் – பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்

Published on

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்றார்.

விமான நிலையத்தின் தற்போதைய சூழலையும், அதன் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊழியர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட அவர், விமான நிலையம் இழப்பை எதிர்கொண்டும், ஊழியர்களின் பிரச்சினைகள் முறைப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

வளர்ச்சி நடவடிக்கைகளில் வெளி தரப்பினரின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்றும், அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மத்தல விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பயணிகளுக்கான சுமையை குறைக்கவும், பயணத்துக்கு முன் வசூலிக்கப்படும் Embarkation Tax முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம், மத்தல சர்வதேச விமான நிலையம் உலகில் பயணிகளுக்கு மிகவும் செலவைக் குறைக்கும் விமான நிலையமாக மாறியுள்ளது என்றும், இத்தகைய வரிவிலக்கு ஏற்பாடுகள் வேறு எந்த விமான நிலையத்திலும் காணப்படுவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் அனைத்துப் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...