follow the truth

follow the truth

May, 5, 2025
Homeவிளையாட்டுதவறை ஏற்றுக்கொண்டார் ஜோகெகவிச்

தவறை ஏற்றுக்கொண்டார் ஜோகெகவிச்

Published on

அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கு தான் போலி தகவல்களை வழங்கியதாக முன்னணி டெனிஸ் வீரர் நொவேன் ஜோகெகவிச் ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நொவேன் ஜோகெகவிச்சின் அவுஸ்திரேலிய விஜயம் குறித்து, போலியான சுற்றுலா தகவல்களை முன்வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

ஜோகெகவிச் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், சமர்பிக்கப்பட்ட ஆவணத்தில், அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த காலப் பகுதியில் அவர் ஸ்பெயின் மற்றும் சர்பியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றதாக கூறப்படும் படங்கள் சமூக வலைத்தயங்களில் பகிரப்பட்டு வந்தன.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் நடத்தப்பட்ட விசாரணைகளில், தான் போலி ஆவணம் சமர்பித்துள்ளமையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பகிரங்க டெனிஸ் போட்டிகளில் பங்குப்பற்றுவதற்காக அவர் கடந்த 5ம் திகதி அவுஸ்திரேலியா நோக்கி பயணித்திருந்தார்.

கொவிட் தடுப்பூசி  செலுத்திக்கொள்ளாமையினால், அவரை அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்காதிருக்க அந்த நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...