வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) எச்சரித்துள்ளது.
அரசினால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையினை விட அரிசியினை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி உரிமையாளர்களுக்கு:
குறைந்தபட்ச அபராதம்- ரூ. 100,000
அதிகபட்ச அபராதம்- ரூ. 500,000 அல்லது 6 மாத கால சிறைத்தண்டனை அல்லது இரண்டும்.
தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் / நிறுவன அமைப்புகளுக்கு:
குறைந்தபட்ச அபராதம்- ரூ. 500,000
அதிகபட்ச அபராதம்- ரூ. 5,000,000
அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து அலுவலக நேரங்களில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாட்டினை அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.