follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP2அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் கடும் சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் கடும் சட்ட நடவடிக்கை

Published on

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) எச்சரித்துள்ளது.

அரசினால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையினை விட அரிசியினை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி உரிமையாளர்களுக்கு:
குறைந்தபட்ச அபராதம்- ரூ. 100,000
அதிகபட்ச அபராதம்- ரூ. 500,000 அல்லது 6 மாத கால சிறைத்தண்டனை அல்லது இரண்டும்.
தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் / நிறுவன அமைப்புகளுக்கு:
குறைந்தபட்ச அபராதம்- ரூ. 500,000
அதிகபட்ச அபராதம்- ரூ. 5,000,000

அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து அலுவலக நேரங்களில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாட்டினை அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....