follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்டொங்காவின் சுனாமி சேதவிபரங்களை ஆராயும் நியூஸிலாந்து

டொங்காவின் சுனாமி சேதவிபரங்களை ஆராயும் நியூஸிலாந்து

Published on

டொங்காவின் ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட சுனாமியின் சேதவிபரங்களை ஆராய நியூஸிலாந்து குறித்த பகுதிக்கு விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.

இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில், இதுவரை துல்லியமான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அதனை ஆராய விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம், சுனாமி காரணமாக 80 ஆயிரம் பேர் வரையில், பாதிக்கப்பட்டிருக்ககூடும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

டொங்காவின் ஆழ்கடலில் நேற்றைய தினம் பாரிய எரிமலை வெடிப்பு இடம்பெற்றதுடன், ஆழிப்பேரலையும் ஏற்பட்டிருந்தது.

இதனால் பசுவிக் தீவுகள் புகையினால் மூடப்பட்டுள்ளதுடன், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...

பாகிஸ்தானின் லாகூர் நகரில் அடுத்தடுத்து மூன்று குண்டுவெடிப்புகள்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்...