follow the truth

follow the truth

August, 20, 2025
HomeTOP2இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

Published on

இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், பொலிஸ் அதிகாரிகளின் நலத்திட்டங்களை விரைவுபடுத்தவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவுறுத்தியுள்ளார்.

2025 பட்ஜெட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக நேற்று (02) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன் முதல் கலந்துரையாடல், இலங்கை பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதாகவே அமைந்தது.

அத்துடன், இலங்கை பொலிஸாரால் கொள்வனவு செய்யப்படவுள்ள சுமார் 200 புதிய வாகனங்களுக்கான கொள்வனவு செயல்முறையை விரைவுபடுத்தவும், இலங்கை பொலிஸாருக்கு சொந்தமான தற்போது கட்டுமானத்தில் உள்ள கட்டிடங்களை விரைவில் முடிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...