மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி ஊடாக இன்று முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து கண்டி மற்றும் கொழும்பில் இருந்து குருணாகல் வரை சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பேருந்துகள் மாத்திரமே இவ்வாறு குறித்த பகுதி ஊடாக இன்று முதல் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து குருணாகலுக்கு 390 ரூபாவாகவும் கொழும்பில் இருந்து கண்டிக்கு 500 ரூபாவாகவும் சொகுசு பேருந்து கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.