follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து - 17 பேர் உயிரிழப்பு

தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து – 17 பேர் உயிரிழப்பு

Published on

பொகோசோ – பாடி நகரங்களுக்கு இடையே உள்ள அபியேட் என்ற இடத்தில் , மக்சாம் நிறுவனத்தின் தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற லாரி ஒரு மோட்டார் பைக் மீது மோதி வெடிவிபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் சுமார் 500 கட்டடங்கள் நொறுங்கியதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் செஜி சாஜி அமெடோனு தெரிவித்துள்ளார்.

இந்த வெடிவிபத்தில் 17 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 59 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வெடிவிபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...