follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடு2022 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக்கு கடன் : 690 கோடி அமெரிக்க டொலர்கள்

2022 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக்கு கடன் : 690 கோடி அமெரிக்க டொலர்கள்

Published on

2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளதாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.

டொலர்களில் செலுத்த வேண்டிய உள்நாட்டு கடனும் இதில் அடங்குவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் 390 கோடி டொலர்கள் வருடந்தின் முதல் காலாண்டில் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த தொகையில் 50 கோடி டொரை இலங்கை மத்திய வங்கி அண்மையில் செலுத்தியது. இதனை தவிர மேலும் 100 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச இறையாண்மை பிணை முறி பத்திரங்களின் காலம் ஜூலை மாதம் முடிவடையவுள்ளது.

இந்த தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக நிதியமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் சர்வதேச இறையாண்மை பிணை முறி பத்திரங்களுக்கு வட்டியாக 86 கோடி அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் நிதியமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...