follow the truth

follow the truth

January, 17, 2025
Homeஉள்நாடு2022 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக்கு கடன் : 690 கோடி அமெரிக்க டொலர்கள்

2022 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக்கு கடன் : 690 கோடி அமெரிக்க டொலர்கள்

Published on

2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளதாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.

டொலர்களில் செலுத்த வேண்டிய உள்நாட்டு கடனும் இதில் அடங்குவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் 390 கோடி டொலர்கள் வருடந்தின் முதல் காலாண்டில் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த தொகையில் 50 கோடி டொரை இலங்கை மத்திய வங்கி அண்மையில் செலுத்தியது. இதனை தவிர மேலும் 100 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச இறையாண்மை பிணை முறி பத்திரங்களின் காலம் ஜூலை மாதம் முடிவடையவுள்ளது.

இந்த தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக நிதியமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் சர்வதேச இறையாண்மை பிணை முறி பத்திரங்களுக்கு வட்டியாக 86 கோடி அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் நிதியமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்று (17)...

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம்

பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக...

கவுன் பிரச்சினைக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் தீர்வு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் சிலர் கவுன் அணிந்து வந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க...