follow the truth

follow the truth

May, 15, 2025
Homeவிளையாட்டுபாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் டுபாய்க்கு மாற்றம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் டுபாய்க்கு மாற்றம்

Published on

இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை துபாய்க்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (பிசிபி) தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நேற்று அவசர ஆலோசனைக்கு பின் இந்த முடிவை அறிவித்துள்ளது. முன்னதாக ராவல்பிண்டி, முல்தான் மற்றும் லாகூரில் நடைபெறவிருந்த பிஎஸ்எல் எக்ஸின் கடைசி எட்டு போட்டிகள் இப்போது துபாயில் நடைபெறும் என்று பிசிபி உறுதிப்படுத்தியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார். குஜராத்தி...

புபுது தசநாயக்கவுக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி

அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்...

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...