follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1இந்தியாவிடமிருந்து மீண்டும் கடன் பெற தயார்! - ஜி.எல் பீரிஸ்

இந்தியாவிடமிருந்து மீண்டும் கடன் பெற தயார்! – ஜி.எல் பீரிஸ்

Published on

இந்தியாவிடமிருந்து எதிர்வரும் காலங்களில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெற உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49ஆவது அமர்வு இம்மாதம் 28ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு ஆணையாளர் நாயகம் மிச்சேல் பெச்சலட் இலங்கை தொடர்பாக முன்வைக்கவுள்ள அறிக்கை மார்ச் மாதம் 3ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளது.

அதன் பிரதியொன்று நேற்று வெளிவிவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு பதிலளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...

சட்டவிரோதமாக உர மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...