follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுடிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையில்

டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையில்

Published on

டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது

இந்திய உதவியுடன் இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அதன் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் செயற்படும் டிஜிட்டல் அடையாள வேலைத்திட்டத்திற்காக இந்தியாவிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக அரசாங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான உடன்படிக்கைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நாட்டில் உள்ள தனிநபர்களின் பயோமெட்ரிக் தரவுகளின் அடிப்படையில் தனிநபர்களின் அடையாளத்தை சரிபார்ப்பதே இதன் நோக்கம்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்நாட்டு பிரஜைகளுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...

இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று(09) முதல் பல விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம்...