அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் விரைவில் சமர்பிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
நேற்றிரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றக் குழுவின் அவசரக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
போதிய எண்ணிக்கையான பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற வாரத்திற்குள் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் மக்கள் விரோத வேலைத்திட்டத்திற்கு எதிராக கண்டியில் இருந்து கொழும்பு வரை பாரிய பாதயாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் நேற்றிரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
24ஆம் திகதி கண்டியில் ஆரம்பமாகி மே 1ஆம் திகதி கொழும்பை சென்றடையும்.
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பலம் கொடுப்பதே நடைபயணத்தின் நோக்கம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.