follow the truth

follow the truth

June, 22, 2025
Homeஉள்நாடுகடலுக்கு சென்ற சிறுவர்கள் உட்பட 13 பேரை இந்தியாவிற்கு செல்வதாக கூறி கைது

கடலுக்கு சென்ற சிறுவர்கள் உட்பட 13 பேரை இந்தியாவிற்கு செல்வதாக கூறி கைது

Published on

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை  ஓய்வை கழிப்பதற்காக தலை மன்னார் கடலுக்கு சென்ற 10 சிறுவர்கள் உட்பட 13  நபர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு மன்னாரில் கரையோர பகுதிகளை சேர்ந்த பல குடும்பங்கள் பொழுதை கழிப்பதற்கு கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையில் சிறுவர் குழு ஒன்றும் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுவர்கள் இந்தியா செல்ல முயற்சிப்பதாக தெரிவித்து தலை மன்னார் கடற்படையினரால் 13 நபர்களும் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான்   முன்னிலையில்   ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரணி S.டினேசன் ஆஜராகிய நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் கடற்கரையை பார்வையிட சென்றதாகவும் கடற்படையினர் வேண்டும் என்று அவர்களை கைது செய்ததாகவும் சமர்பணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி 13 நபர்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடன் ஒப்படைத்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து அறிக்கையை பார்வையிட்ட பின்னர் குறித்த 10 சிறுவர்களும் பெற்றோர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு 3 நபர்களையும் பிணையில் செல்ல அனுமதி அளித்தார்.

கடந்த மாதமும் மன்னார் மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு என வருகை தந்து விடுதி ஒன்றில் தங்கியிருந்த குடும்பம் ஒன்றையும் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதம அமைச்சர் கலாநிதி...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நாளை கிளிநொச்சியில்

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம்...

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம்?

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி...