கண்டியில் இருந்து கொழும்புக்கு வந்த கடுகதி ரயில் ஒன்று ரம்புக்கனை – கடிகமுவவுக்கு இடையில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மலையகத்திற்கான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த ரயிலின் தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நாளை முதல் சகல ரயில் சேவைகளும் வழமைப்போல் இடம்பெறும் என தொடருந்து போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.