ரயிலில் இடம் பிடிப்பதற்காக ஓடிய இளைஞன் தவறி விழுந்து மரணம்!

754

மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணிக்க தயாரான ‘சாகரிகா’ புகையிரதத்தில் ஏற முற்பட்ட இளைஞன் புகையிரதத்திற்கும் நடைமேடைக்கும் இடையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று பதிவானது.

புகையிரதத்திற்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கிய இளைஞனை வெளியே எடுப்பதற்கு சுமார் ஒரு மணிநேரம் வரை செலவானதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறையில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் திக்வெல்ல வெவ்ருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதான ரூசர விதானகே என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் குறித்த இளைஞன், பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here