follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிடியில் நெதன்யாகு?

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிடியில் நெதன்யாகு?

Published on

வெளிநாட்டு ஊடகங்களின்படி, இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட்களை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) திட்டங்களால் இஸ்ரேலிய அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

அவர்கள் மீது போர்க்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி பட்டியலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹேக்’கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மூன்று ஆண்டுகளாக “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில்” இஸ்ரேலிய படைகளின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மிகக் கடுமையான குற்றங்களுக்காக சர்வதேச சட்டத்தின் கீழ் தனிநபர்களை குற்றஞ்சாட்டவும் விசாரணை செய்யவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

முன்னதாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முன்னாள் லிபிய தலைவர் முயம்மர் கடாபி, உகண்டா இராணுவத் தலைவர் ஜோசப் கோனி ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது.

இந்த திட்டம் குறித்து பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இந்த நடவடிக்கையின் மூலம் தனது நாட்டை பாதுகாக்கும் முயற்சியை குலைக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...