follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்நியூசிலாந்தில் 6 மாதங்களுக்கு பின் முதல் கொரோனா மரணம்

நியூசிலாந்தில் 6 மாதங்களுக்கு பின் முதல் கொரோனா மரணம்

Published on

ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நியூசிலாந்தில் கொரோனா தொற்று காரணமாக முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உடல்நிலை மோசமடைந்த 90 வயதான பெண் ஒருவர், இதய நோய் இருந்துள்ளதாகவும் வென்டிலேட்டர் உதவியின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நியூசிலாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 16ஆம் திகதிக்குப் பிறகு, நியூசிலாந்தில் பதிவு செய்யப்படும் முதல் கொரோனா உயிரிழப்பு இதுவாகும்

இதேவேளை நியூஸிலாந்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், மிகத் தீவிரமாக பரவலடையும் டெல்டா பிறழ்வு தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் சமிக்ஞைகள் தென்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அலையில் கடந்த வார இறுதியில் 84 பேருக்கு உச்சபட்சமாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இவ்வார இறுதியில் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...

ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா மரணம்

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில்...