follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஅகதிகளாக தமிழகம் சென்ற 8 இலங்கையர்கள்

அகதிகளாக தமிழகம் சென்ற 8 இலங்கையர்கள்

Published on

இரண்டு மாதக் கைக்குழந்தை உள்ளிட்ட 8 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

குறித்த எட்டு பேரும் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக மூன்றாம் மணல் திட்டு பகுதியில் படகு செலுத்துனர்களினால் இறக்கிவிடப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் தமிழக கடலோர காவல்துறையினரால் 2 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 8 பேர் இன்று அதிகாலை மீட்கப்பட்டனர்.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்றடைந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...