2022 ஆம் ஆண்டின் முதல் பாடசாலைத் தவணை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் திகதி முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் திகதிக்கு பின்னர் தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள்/விண்ணப்பங்கள் தொடர்பான விடயங்கள் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் விண்ணப்பதாரிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்மானங்கள் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.