நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரி காரில் பயணித்த ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபரும் சுடப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்