follow the truth

follow the truth

June, 27, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு மியன்மார் அரிசி நன்கொடை

இலங்கைக்கு மியன்மார் அரிசி நன்கொடை

Published on

170 மில்லியன் ரூபாய் (அண்ணளவாக 463,215 அமெரிக்க டொலர்) பெறுமதியான 1000 மெட்ரிக் தொன் மியன்மார் வெள்ளை அரிசியை இலங்கைக்கு மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளதாக யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகம், இன்று (06) தெரிவித்துள்ளது.

மியன்மாரின் யாங்கூனில் உள்ள ஆசிய உலக துறைமுக முனையத்தில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மியன்மார் மத்திய வர்த்தக அமைச்சர் யு. ஆங் நைங் ஓவினால், மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவிடம் அரிசித் தொகுதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இச்சலுகையை ஏற்றுக்கொண்ட தூதுவர், சவாலான நேரத்தில் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியமைக்காக மியன்மார் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 07ஆந் திகதி நடைபெற்ற நற்சான்றிதழ் வைபவத்தின் போது மியன்மாரின் சிரேஷ்ட பொது அமைச்சர் ஆங் ஹ்லேயிங்கிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்த போதும், மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 73ஆவது ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் போதும் தூதுவர் ஜனக பண்டார விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சரக்கு செப்டெம்பர் 04ஆந் திகதி அனுப்பப்பட்டதுடன், செப்டெம்பர் மாத இறுதிக்குள் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் என்று இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிக்குன்குன்யா – மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்

நுளம்புகளால் பரவக்கூடிய வைரஸ் ஊடாக சிக்குன்குன்யா ஏற்படுகின்றது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவில் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப்...

உலக சந்தையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி

இன்று கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22...

இஸ்லாமிய புது வருடத்தை முன்னிட்டு ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் செய்தி

முஹர்ரம் 1447 இஸ்லாமிய புது வருடத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய...